செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நடிகை த்ரிஷா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட தனது 22 வருட பயணத்தில் இருக்கிறார். தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, சில படங்களில் கதையின் நாயகியாக நடித்தபடி முதல் வரிசை நாயகியாகவே இருக்கிறார். அதேசமயம் சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, இன்னொரு பக்கம் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நிறுத்தப்பட்டு என பல சச்சையான கசப்பான அனுபவங்களை தாண்டி தான் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் த்ரிஷா. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே நடிகர் விஜய்யுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று இணைத்து பேசப்பட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அப்படித்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக விஜய், திரிஷா இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்று வந்தார்கள் என்கிற தகவலும் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமீபநாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரிஷாவை பொறுத்தவரை இந்த விஷயங்களுக்கு நேரடியாக எதுவும் ரியாக்ஷன் காட்ட மாட்டார். ஆனால் தனது சோசியல் மீடியா பதிவுகள் மூலமாக தனது பதிலை வேறு விதமாக சொல்வார்.
அப்படி சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். அப்படியானால் இதுதான் சுய பரிசோதனை செய்வதற்கான நேரம்” என்று கூறியுள்ளார்.
சமீபநாட்களாக தன் மீது சோசியல் மீடியாவில் சில மனிதர்கள் பேசும் வெறுப்பு பேச்சுகளால்தான் த்ரிஷா இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.