இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு பவன் கல்யாணும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.