பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி |
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு விக்ரவாண்டியில் நடத்தினார் விஜய். அதையடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை எஸ்ஏசி இயக்கிய படங்களில் நான் நடித்தபோது அவரை பார்த்து இருக்கிறேன். ரொம்ப அமைதியாக இருப்பார் . ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜய்யை பார்த்தேன். அந்த அளவுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய், பாஜகவை தாக்குவதை யோசித்து விட்டு தான் பேசுவார் என்று கருதுகிறேன். முக்கியமாக ஈவேராவின் அடிப்படை நாத்திகம் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார். மேலும் விஜய் கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம் சமத்துவ மக்கள் கட்சி கொடிபோல் உள்ளது. அவர் இதை பயன்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன் என்று ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.