'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி பாடகியரில் ஒருவராக இருந்தவர் சுசித்ரா. சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள், நடிகையரைப் பற்றிய அவரது பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன்பிறகு அமைதியாக இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தான் சென்னையைவிட்டு மும்பை சென்று செட்டிலாகிறேன் என்றும் நேற்று தெரிவித்திருந்தார். அடுத்து மற்றுமொரு பதிவையும் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கான கடிதம் என தலைப்பிட்டு அதில், “போலி கணவனாக இருந்து, குழந்தைகளைப் பெறவிடாமல் தடுத்ததன் மூலம் என் வாழ்நாளின் 13 ஆண்டுகளை அழித்துவிட்டாய். சென்னையில் நான் கடுமையாக உழைத்த இடத்திலிருந்து உனது வைரல் வீடியோக்களால் என்னை தூக்கி எறிந்துவிட்டீர்கள்.
நான் உன்னை மணந்தபோது நீ திறமையற்ற, நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்தாய். உனது ஒரே சீயர்லீடர் உனது அம்மாதான். உனது நடிப்பு அபத்தமானது என்பதை மற்றவர்கள் சொல்ல முயன்றனர். நீங்கள் ஒரு முக்கிய அங்கமாக இருந்த ஒவ்வொரு படத்தையும் அழித்துவிட்டீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழகத்திற்கோ அல்லது சென்னைக்கோ திரும்ப வருவதில்லை என்ற எனது முடிவுப் பற்றி நான் வருத்தப்படுகிறேன். அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். கார்த்திக்குமாரின் ஆதரவாளர்களே, தயவு செய்து இதை அவருடன் பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பற்றி அவதூறு செய்ய அவரை ஊக்குவியுங்கள். அதனால், இதற்கு கமெண்ட்கள் தேவையில்லை,” என அப்பதிவின் கமெண்ட் பகுதியையும் பிளாக் செய்துள்ளார்.




