Advertisement

சிறப்புச்செய்திகள்

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் | உயிரோடு இருப்பேனா என அச்சம் ஏற்பட்டது ; லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் இருந்து தப்பிய ப்ரீத்தி ஜிந்தா | ரஜினியின் பில்லா தோல்வி படமா? - விஷ்ணுவர்தனுக்கு கண்டனம் | நடிகை ஹனிரோஸ் மீதான சர்ச்சை கருத்து.. முன்ஜாமின் விண்ணப்பித்த மீடியா ஆர்வலர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எளிய சொற்களைக் கொண்டு வலிய பொருள் தந்த வல்லமைமிகு கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன்

17 அக், 2024 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-The-mighty-poet-Kaviarasar-Kannadasan-who-gave-powerful-meaning-with-simple-words


படித்தவன் முதல் பாமரன் வரை அறியும் பொருட்டு, எளிய தமிழ் சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்தை வெளிப்படுத்தும் வல்லமைமிகு கவிஞனாக பார்க்கப்பட்டவர்தான் 'கவியரசர்' கண்ணதாசன். “எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும், மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்” என்று மனித வாழ்க்கையை போகிறபோக்கில் எல்லோரும் அறியும் வண்ணம் எளிய தமிழில் பாடிச் சென்றவன் இவன்.

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே, வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே” என்ற ஒற்றை வரியில் ஒட்டு மொத்த தமிழினத்தையும், இலக்கிய ஞானம் பெற்ற சமூகமாக மாற்றி அமைத்த மந்திரம் அறிந்த கவிஞன் இவன்.

மானே, தேனே, பொன்மானே என்று பெண்களை வர்ணித்து வந்த கவிஞர்கள் மத்தியில், “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை” என்று இலக்கிய நெடியோடு இதயம் தொட்டுச் சென்ற இணையற்ற கவிஞன் இவன்.
ஆத்திச்சூடி பாடித் தந்த அவ்வைக்கே அழகு தமிழில் ஆன்மிகப் பாடல் தந்து ஆச்சர்யப் படுத்தியவர் இவர். “திருவிளையாடல்” திரைப்படத்தில் வந்த இவரது கவி விளையாடல்களில் ஒன்றுதான் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், பத்தானவன் நெஞ்சில் பற்றானவன், பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்” என்று பரம்பொருளை வரிசைப் படுத்திப் பாடி நம்மை பரவசப்படுத்திச் சென்ற பைந்தமிழ் கவிஞன் இவன்.

நகைச்சுவைப் பாடல்களில் கூட நல்ல பல கருத்துக்களை நயம்பட கூறிச் செல்வதில் இவருக்கு நிகர் இவரே. “வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தணா துந்தணா…” என்ற இவரது இந்தப் பாடல் மாதச் சம்பளம் பெறும் மத்திய தர வர்கத்தினருக்கு இன்றும் கூட பொருந்திப் போகும் ஒரு மந்திரப் பாடல் என்றால் அது மிகையன்று.

காதல், சோகம், வீரம், விரக்தி, வேதனை, ஏமாற்றம், சோதனை, பக்தி என இவர் பாடாத பாடல்களே இல்லை எனும் அளவிற்கு மனித வாழ்வு மொத்தத்தையும் தனது பாட்டிற்குள் அடைத்துச் சென்ற இந்த சிறுகூடல்பட்டி சித்தர், “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடி மரணத்தையும் வென்று, மனித மனங்களில் இன்றும் தனது படைப்புகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கவிமகன். கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாளான இன்று அவரது திரையிசைப் பாடல்கள் என்ற தேன்கிண்ணத்தில் ஒரு சில துளிகளை நாம் நினைவு கூர்ந்து சுவைத்ததில் பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு சுசித்ரா எழுதிய கடிதம்முன்னாள் கணவர் கார்த்திக் ... ஹன்சிகாவின் புதிய வீட்டின் கிரஹப் பிரவேசம் ஹன்சிகாவின் புதிய வீட்டின் கிரஹப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in