7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சில ஹிந்திப் படங்களில் நடித்த பின் 'தேவரா 1' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தினார். மும்பையில் வளர்ந்தாலும் ஜான்வி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது தெலுங்கில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சுந்தரத் தெலுங்கில் பேசி தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த 'தேவரா 1' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி அதிகக் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், “இந்த வார்த்தைகளை நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன். அதனால், இப்போதைக்கு உங்களுக்காக என்னிடம் இருந்து இந்த குறுஞ்செய்தி,” என வீடியோவைப் பதிவிட்டுப் பேசியுள்ளார்.

அதில், “என்னை 'ஜானு பாப்பா' என்று அன்புடன் அழைக்கும் அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும், குறிப்பாக என்டிஆர் சார் ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் என் மீது அன்பைப் பொழிவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். நீங்கள் அனைவரும் என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைப்பேன். 'தேவரா' எனது முதல் படி,” எனப் பேசியுள்ளார்.