19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் தலா ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவிற்கு அங்கே அவருக்கு மலையாள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் கடந்த 2018ல் ‛ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ராய் லட்சுமி.
இந்த நிலையில் தற்போது ஆறு வருடங்கள் கழித்து ‛டிஎன்ஏ' என்கிற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ராய் லட்சுமி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரேச்சல் புன்னூஸ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.
கடந்த இரண்டு வருடங்களாக லெஜன்ட், போலா ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிச் சென்ற ராய் லட்சுமி இந்த படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக 2021ல் கன்னடத்தில் வெளியான ஜான்சி ஐபிஎஸ் என்கிற படத்திலும் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.