ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். ஒரு பக்கம் வில்லத்தனம், இன்னொரு பக்கம் காமெடி என கலந்து கட்டி நடித்து வரும் பஹத் பாசில் சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் அவரது ரங்கா கதாபாத்திரத்திற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் நடிப்பு குறித்து பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “12 வருடங்களாக கதையுடன் அவர் பயணித்து வந்துள்ளார். ஆறு வருடங்களாக அந்த கதாபாத்திரத்தை மனதில் தாங்கி பயணித்துள்ளார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்காக இத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கின்ற நபர் நான் இல்லை. அதிகபட்சம் ஒரு கதையுடன் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை மட்டுமே என்னால் பயணிக்க முடியும்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.