கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். ஒரு பக்கம் வில்லத்தனம், இன்னொரு பக்கம் காமெடி என கலந்து கட்டி நடித்து வரும் பஹத் பாசில் சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் அவரது ரங்கா கதாபாத்திரத்திற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் நடிப்பு குறித்து பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “12 வருடங்களாக கதையுடன் அவர் பயணித்து வந்துள்ளார். ஆறு வருடங்களாக அந்த கதாபாத்திரத்தை மனதில் தாங்கி பயணித்துள்ளார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்காக இத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கின்ற நபர் நான் இல்லை. அதிகபட்சம் ஒரு கதையுடன் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை மட்டுமே என்னால் பயணிக்க முடியும்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.