திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள நடிகர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் சங்கச் செயலாளர் சித்திக் மீது பல புகார்கள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்பே அறிந்திருந்த நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தார் என்று அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தார்கள்.
இதனால் தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஜூனில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் துணைத்தலைவர் ஜெயன சேர்தலா, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் பழைய நிர்வாகிகள் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மோகன்லால் மலையாள நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தலைவராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், தான் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவதால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.