ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைத்த சமுத்திரகனி அதன் பிறகு கடந்த 10 வருடங்களில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் சேர்த்து ரொம்பவே பிஸியான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிக முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க அழைக்கிறார்கள். அதேசமயம் மலையாளத்திலும் கூட சமுத்திரக்கனி சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷிகார், திருவம்பாடி தம்பான், கரிங்குன்னம் சிக்சஸ் உள்ளிட்ட படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரகனி. அதேபோல 2016ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக அவர் மலையாளத்தில் எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‛ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' (ஒரு விசாரணையின் ஆரம்பம்) என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரகனி. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புலனாய்வு திரில்லர் படமான கண்ணூர் ஸ்குவாடு பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும் டிரைலரை பார்க்கும்போதே இந்த படத்தின் வெற்றிக்கான சாத்திய கூறுகள் நிறையவே இருப்பதும் தெரிகிறது.




