இன்னும் 4 வாரம் தேவை: ஜனநாயகன் சென்சார் வழக்கில் தணிக்கை வாரியம் வாதம் | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? |

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைத்த சமுத்திரகனி அதன் பிறகு கடந்த 10 வருடங்களில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் சேர்த்து ரொம்பவே பிஸியான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிக முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க அழைக்கிறார்கள். அதேசமயம் மலையாளத்திலும் கூட சமுத்திரக்கனி சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷிகார், திருவம்பாடி தம்பான், கரிங்குன்னம் சிக்சஸ் உள்ளிட்ட படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரகனி. அதேபோல 2016ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக அவர் மலையாளத்தில் எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‛ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' (ஒரு விசாரணையின் ஆரம்பம்) என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரகனி. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புலனாய்வு திரில்லர் படமான கண்ணூர் ஸ்குவாடு பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும் டிரைலரை பார்க்கும்போதே இந்த படத்தின் வெற்றிக்கான சாத்திய கூறுகள் நிறையவே இருப்பதும் தெரிகிறது.