Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராவணன் படப்பிடிப்பில் என்னை ஒரு ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன் : பிரித்விராஜ்

06 ஏப், 2024 - 15:10 IST
எழுத்தின் அளவு:
I-felt-like-a-lamb-on-the-set-of-Ravana:-Prithviraj

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் சமீப காலமாக ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் உருவெடுத்துள்ளவர் நடிகர் பிரித்விராஜ். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள படே மியான் சோட்டே மியான் என்கிற படமும் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிரத்னம் பாராட்டு குறித்தும் அவரது இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரித்விராஜ். அப்போது அவர் கூறும்போது, “ராவணன் படத்தில் நடிக்கும்போது எனக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும். அந்தப் படம் தமிழ், ஹிந்தி என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதால் படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலும் வடநாட்டு நடிகர்கள் அதிகம் இருந்தனர், அங்கே இருந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் விக்ரம் ஆகியோரை எல்லோருக்கும் தெரிந்திருந்ததால் அனைவரும் அவர்களிடம் தேடி சென்று பேசுவதை பார்க்க முடிந்தது.

அதேசமயம் என்னைப் பற்றி சிலர் பேசும்போது யார் இந்த புது பையன், மணிரத்னம் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் விஷயம் உள்ளவனாகத்தான் இருப்பான் என்று என் காது படவே பேசிக் கொண்டார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சிறிய ஆட்டுக்குட்டி போல தான் நான் உணர்ந்தேன். அதேசமயம் மணிரத்னம் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் நடிப்பில் மட்டுமல்ல டைரக்ஷனிலும் எவ்வளவோ விஷயங்களை கற்றுக் கொண்டேன். இன்று ஆடுஜீவிதம் படம் பார்த்துவிட்டு மணிரத்னம் பாராட்டியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'வருஷங்களுக்கு சேஷம்' நிவின்பாலியின் கம் பேக்காக இருக்கும் : வினித் சீனிவாசன்'வருஷங்களுக்கு சேஷம்' ... பாம்பே ஜெயஸ்ரீயின் மகனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் வினித் சீனிவாசன் பாம்பே ஜெயஸ்ரீயின் மகனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

07 ஏப், 2024 - 04:54 Report Abuse
VSaminathan நல்லவேளை அய்யப்பன் படத்தில் கழுதையாக உணராமலிருந்தாரே பாவம்-விளம்பரத்துக்காக மிருகங்களாக தன்னை நினைத்துக் கொள்வது எவ்வளவு அனியாமை மிக்கது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in