ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளை (மார்ச் 28) இப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு ஆடு ஜீவிதம் படத்தை பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த கமல் படம் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
கமல் பேசும்போது, “இயக்குனர் பிளஸ்சிக்கு நன்றி. இது உண்மையிலேயே ஒரு கடின உழைப்பு.. யாரோ ஒருவருக்கு நடந்திருக்கிற விஷயம் தான். மணிரத்னம் கூட எப்படி இதற்காக நீங்கள் உழைத்தீர்கள் என ஆச்சரியப்பட்டார். படத்தின் இடைவேளையின் போது இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டது. பிரித்விராஜ் மிகப்பெரிய அளவில் அதிலும் குறிப்பாக அந்த குளிக்கும் காட்சியில் பிரமிக்க வைத்துள்ளார்.
இவ்வளவு தூரத்திற்கு அவர் செல்வார் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒளிப்பதிவாளர் (சுனில் கே.எஸ்) பணி உண்மையிலேயே கடினமானது. படைப்பாளிகளாக நாங்கள் புரிந்து கொள்கிறோம். மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அருமையான படம். இந்த படத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இந்த படம் குறித்து தனது பாராட்டை வெளிப்படுத்தும் போது, “வியக்கத்தக்க, மூச்சை இழுத்து பிடிக்கின்ற வகையிலான காட்சிகள் மற்றும் பிரித்திவிராஜ் அற்புதமான பணியை இதில் செய்துள்ளார்'' என்று பாராட்டியுள்ளார்.