'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நூற்றுக்கணக்கான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும், இயக்குனருமான சூரிய கிரண், 48 உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். குறிப்பாக ‛மௌன கீதங்கள், கல்லுக்குள் ஈரம், கடல் மீன்கள், படிக்காதவன்' ஆகியவை தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்கள் ஆகும்.
பின்னர் தனது பெயரை சூரிய கிரண் என மாற்றி தெலுங்கில் சத்யம், பிரமாஸ்திரம் போன்ற படங்களை இயக்கினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தமிழில் வரலட்சுமி நடிப்பில் 'அரசி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்னும் இந்தப்படம் திரைக்கு வரவில்லை.
இவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(மார்ச் 11) காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. இவர் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார் சூரிய கிரண்.
நடிகை காவேரியை திருமணம் செய்த சூரிய கிரண் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.