ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவராஜ் குமார். சமீபகாலமாக இவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் தனது மார்கெட் விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இவரது பார்வை தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியுள்ளது.
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்போது சிவராஜ் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.