அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? |

2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த படம் அவர்களும் இவர்களும். இந்த படத்தை வீரபாண்டியன் என்பவர் இயக்கியிருந்தார். வீரபாண்டியன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு கொண்டு வந்ததே நான் தான். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்த பேட்டியிலும் கூறுவதில்லை. அதோடு தற்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டதால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் பணத்திற்கு கஷ்டப்பட்டபோது ஆட்டோவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்றும், சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் வீரபாண்டியன். அவர் சொன்ன இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நேரடியாக வீரபாண்டியனை கூறாமல், மறைமுகமாக, ‛‛நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வது வாழ்க்கையும் உறவினையும் கெடுத்துவிடும். யாராக இருந்தாலும் மொத்த கதை என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே சரியானதாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




