Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் 'கருப்பு நிலா' : 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

29 டிச, 2023 - 07:21 IST
எழுத்தின் அளவு:
Black-Moon-Bids-Farewell-With-Peoples-Tears:-Vijayakanths-Body-Remains-Well-After-72-Bombs

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.



அரசு மரியாதை
வழிநெடுகிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வெள்ளம்போல் அவருக்கு மரியாதை செலுத்தினர். கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். சந்தனபேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், அலுவலகம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

விஜயகாந்த் கனவை வெற்றி பெற செய்வோம் : பிரேமலதா
விஜயகாந்த்தின் கனவை நிச்சயமாக வெற்றி பெற செய்வோம் என தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா கூறினார். மேலும் அவர் கூறுகையில், இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி.

இது வரையில் தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத இடத்தை கொடுத்துள்ளீர்கள். 2 நாட்களில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அன்பை வெளிப்படுத்தும் கூட்டத்தை தமிழகம் முதன் முறையாக சந்திக்கிறது. இதற்கு காரணம் கேப்டன் செய்த தர்மம் தான் காரணம் என அவர் தெரிவித்து உள்ளார்.



போலீசாருக்கு ராயல் சல்யூட்
விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த போலீசாருக்கு ராயல் சல்யூட் என்றார்.

வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்த் தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த இந்த சொக்க தங்கத்திற்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் இருக்கும். அப்படியே மக்கள் மனதிலும் நிலைத்து நிற்பார்.

போய் வாருங்கள் கேப்டன்...! - இந்த உலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கும்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவில் 20 ஆண்டுகள் : எல்லாம் உங்களால்தான் என உருகும் நயன்தாராசினிமாவில் 20 ஆண்டுகள் : எல்லாம் ... விடைபெற்றார் ‛கேப்டன்' விஜயகாந்த் - புகைப்பட ஆல்பம் தொகுப்பு விடைபெற்றார் ‛கேப்டன்' விஜயகாந்த் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)