இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நயன்தாரா சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'ஐயா' படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். தற்போது 20 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையான நயன்தாரா இந்த ஆண்டு பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நான் 20 ஆண்டுகளை கடந்தும் இங்கே நிற்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம். எனக்கு உந்து சக்தியாகவும், இதய துடிப்பாகவும் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் சினிமா வாழ்க்கை பயணம் முழுமையடையாது. 20 ஆண்டு மைல் கல்லை எட்டுவதற்கு எனது பயணத்தை வடிவமைத்து ஊக்கமளிக்கும் சக்தியாக நீங்கள் இருந்ததை கொண்டாடுகிறேன்.
எனது ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றியாக மாற்றிய மந்திரம் நீங்கள்தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடும் போது, இந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத, ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் உங்கள் அன்பு எனக்கு வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.