கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் |
சென்னை: சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது.
இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை.
நாராயணபுரம் ஏரி உடைந்ததால், அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பள்ளிக்கரணை ஆனந்த் நகர் எக்ரட் பார்க்கில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை. வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.