சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஷாலினி பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, "அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த நான் கத்தி திட்டி, இயக்குநரை அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.