பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாலிவுட் நடிகரான அமீர் கானின் அம்மா சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக அவர் கடந்த சில வாரங்களாக சென்னையிலேயே தங்கியுள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிலிருந்து விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக காலையில் டுவீட் செய்திருந்தார். அதன்பிறகு அவரை மீட்புப் படையினர் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் அமீர் கான் உள்ளிட்டவர்கள் அப்போது மீட்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புக் குழுவினர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் தான் மீட்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.