சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சமீபத்தில் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "இயக்குனராக செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால், சொந்த வாழ்க்கையில் அப்படிபட்டவர் இல்லை, அமைதியானவர். எப்போதும் கதை எழுதிக்கொண்டு தன்னை பிசியாகவே வைத்து இருப்பார். எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்படி தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன். திருமணம் ஆன புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டி வந்தது. ஆனால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.