பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் |
நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சமீபத்தில் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "இயக்குனராக செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால், சொந்த வாழ்க்கையில் அப்படிபட்டவர் இல்லை, அமைதியானவர். எப்போதும் கதை எழுதிக்கொண்டு தன்னை பிசியாகவே வைத்து இருப்பார். எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்படி தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன். திருமணம் ஆன புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டி வந்தது. ஆனால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.