ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதே காணாமல் போனார். இப்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களிடையே கலந்து உரையாடி வருகிறார்.
தற்போது கிரண் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒருவரை ரொம்ப காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் மனம் உடைந்து போனேன். அதன் பிறகு படங்களில் சில காலம் நான் நடிக்காமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வி தான் காரணம். ஒருவேளை அப்போது தெளிவாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால், தவறான முடிவு எடுத்து என் வாழ்க்கை நாசமானது. இப்போது மீண்டும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் , யாரும் அழைக்கவில்லை. நான் நடித்த 5 படங்கள் தொடர் வெற்றியைத் அடைந்தது. இப்போது புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் .