பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதே காணாமல் போனார். இப்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களிடையே கலந்து உரையாடி வருகிறார்.
தற்போது கிரண் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒருவரை ரொம்ப காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் மனம் உடைந்து போனேன். அதன் பிறகு படங்களில் சில காலம் நான் நடிக்காமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வி தான் காரணம். ஒருவேளை அப்போது தெளிவாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால், தவறான முடிவு எடுத்து என் வாழ்க்கை நாசமானது. இப்போது மீண்டும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் , யாரும் அழைக்கவில்லை. நான் நடித்த 5 படங்கள் தொடர் வெற்றியைத் அடைந்தது. இப்போது புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் .




