தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு |
கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதே காணாமல் போனார். இப்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களிடையே கலந்து உரையாடி வருகிறார்.
தற்போது கிரண் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒருவரை ரொம்ப காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் நான் மனம் உடைந்து போனேன். அதன் பிறகு படங்களில் சில காலம் நான் நடிக்காமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வி தான் காரணம். ஒருவேளை அப்போது தெளிவாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால், தவறான முடிவு எடுத்து என் வாழ்க்கை நாசமானது. இப்போது மீண்டும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் , யாரும் அழைக்கவில்லை. நான் நடித்த 5 படங்கள் தொடர் வெற்றியைத் அடைந்தது. இப்போது புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் .