துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் ‛2018'. கேரளாவில் பெய்த பெரு மழை வெள்ளம் மற்றும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது.
இதையடுத்து அவர் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்சன்ஸ், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த படத்தில் யார் ஹீரோ என அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி, கிச்சா சுதீப் ஆகியோரை சந்தித்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதனால் இவரின் அடுத்தபடம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.