துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சென்னையில் பிறந்து இங்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் சமந்தா. ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டாலும், அவ்வப்போது வந்து தமிழ்ப் படங்களிலும் நடித்துவிட்டுச் செல்வார்.
தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா பல மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சையில் இருந்தார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' படத்திலும், ஹிந்தியில் 'சிட்டாடல்' என்ற இணையத் தொடரிலும் நடித்து வருகிறார். அவற்றின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓரிரு ஆண்டுகளுக்குப் புதிய படங்களில் அவர் நடிக்கப் போவதில்லையாம்.
தனது தசை அழற்சி நோய்க்கு மேலும் சிகிச்சை எடுத்து முழுமையாக உடல்நலம் தேறிய பின்னர் தான் நடிக்க வரப்போகிறார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், நடிப்பதற்காக சில தயாரிப்பாளர்களிடம் வாங்கிய முன்பணத் தொகையையும் திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.
இந்தத் தகவல்கள் குறித்து சமந்தா மறுப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமீப காலமாக செய்திகள் வெளியாவதும் பின்னர் மறுப்புகள் வருவதும் இயல்பாகிவிட்டது.