துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சென்னையில் பிறந்து இங்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் சமந்தா. ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டாலும், அவ்வப்போது வந்து தமிழ்ப் படங்களிலும் நடித்துவிட்டுச் செல்வார்.
தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா பல மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சையில் இருந்தார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' படத்திலும், ஹிந்தியில் 'சிட்டாடல்' என்ற இணையத் தொடரிலும் நடித்து வருகிறார். அவற்றின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓரிரு ஆண்டுகளுக்குப் புதிய படங்களில் அவர் நடிக்கப் போவதில்லையாம்.
தனது தசை அழற்சி நோய்க்கு மேலும் சிகிச்சை எடுத்து முழுமையாக உடல்நலம் தேறிய பின்னர் தான் நடிக்க வரப்போகிறார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், நடிப்பதற்காக சில தயாரிப்பாளர்களிடம் வாங்கிய முன்பணத் தொகையையும் திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.
இந்தத் தகவல்கள் குறித்து சமந்தா மறுப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமீப காலமாக செய்திகள் வெளியாவதும் பின்னர் மறுப்புகள் வருவதும் இயல்பாகிவிட்டது.