ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
‛நான் சிரித்தால், தமிழ்படம் 2' ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‛ஸ்பை' படம் வெளியானது. அடுத்த ஜாக்பாட்டாக பவன் கல்யாண் பட வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பை படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு பேசப்பட்டதால் தற்போது பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.