‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த மார்ச் 31ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சேத்தன், கவுதம் மேனன், நாயகி பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் தங்களது நடிப்புக்காக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றனர். ரிலீஸான சமயத்திலேயே தமிழ்நாட்டையும் தாண்டி இந்த படம் மற்ற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் இந்த படத்தில் ஆயுதப்படை கான்ஸ்டபிள்களில் ஒருவராக நடித்திருந்த கன்னட நடிகர் சர்தார் சத்யா என்கிற எஸ் சத்யா என்பவர் இந்த படம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதை தொடர்ந்து தனக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
“கடந்த 2007ல் இருந்து கன்னட சினிமாவில் பயணித்து வந்தாலும் இதுவரை தான் கற்றுக் கொண்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் மாறாக வெற்றிமாறனிடம் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.. சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை விடுதலை படத்தில் நடித்த பிறகு தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்” என்று சிலாகித்து கூறியுள்ளார் நடிகர் எஸ் சத்யா