ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இன்று சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. வாணி போஜனின் மிரட்டலான நடிப்பில் வெளியான செங்களம் வெப்தொடருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பேச்சுலர் பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து மனம் திறந்துள்ளார். பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் வாணி போஜன் தான் நடிக்க இருந்தார். ஆனால், படத்தில் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும். சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வாணி போஜனுக்கு இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் வந்துள்ளது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசித்த அவர், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.