காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. பழைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் சொல்லியிருந்தாலும் சில பாடல்கள் படத்துடன் ஒட்டவில்லை என்ற கருத்தே அதிகமாக இருந்தது. ஆனாலும், படத்தில் கொஞ்சமாக இடம் பெற்ற 'அலை கடலாய்' பாடல் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இம்மாதம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் 'ஸ்லோ பாய்சன்' ஆக ரசிகர்கள் மனதில் நுழைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் சிங்கிளான 'அக நக' லிரிக் வீடியோ சக்திஸ்ரீ கோபாலனின் இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. அப்பாடல் கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் பாடலாக அமைந்தது.
அடுத்து நேற்று 'வீரா ராஜ வீர' லிரிக் வீடியோ வெளியாகியது. இப்பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஜெயம் ரவி, சோபிதா துலிபலா இடையிலான காதல் பாடலாக உள்ளது. இரண்டு பாடல்களையும் பைந்தமிழ் வரிகளுடன் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் படத்திற்கேயுரிய 'சரித்திர டச்'சை உணர முடிகிறது.




