உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. பழைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் சொல்லியிருந்தாலும் சில பாடல்கள் படத்துடன் ஒட்டவில்லை என்ற கருத்தே அதிகமாக இருந்தது. ஆனாலும், படத்தில் கொஞ்சமாக இடம் பெற்ற 'அலை கடலாய்' பாடல் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இம்மாதம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் 'ஸ்லோ பாய்சன்' ஆக ரசிகர்கள் மனதில் நுழைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் சிங்கிளான 'அக நக' லிரிக் வீடியோ சக்திஸ்ரீ கோபாலனின் இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. அப்பாடல் கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் பாடலாக அமைந்தது.
அடுத்து நேற்று 'வீரா ராஜ வீர' லிரிக் வீடியோ வெளியாகியது. இப்பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஜெயம் ரவி, சோபிதா துலிபலா இடையிலான காதல் பாடலாக உள்ளது. இரண்டு பாடல்களையும் பைந்தமிழ் வரிகளுடன் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் படத்திற்கேயுரிய 'சரித்திர டச்'சை உணர முடிகிறது.