ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கண்ணை நம்பாதே. இப்படத்தை மு.மாறன் இயக்கி இருக்கிறார். வருகிற 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து ஆத்மிகா கூறுகையில், கண்ணை நம்பாதே படம் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடிக்காத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விடுவேன். இந்த படம் எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமையப் போகிறது. இந்த கதையை இயக்குனர் சொன்னபோது கதையோடு முழுமையாக ஒன்றி விட்டேன். அந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருந்தது. கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் உடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்கிறார் ஆத்மிகா.