தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா |
தமிழ் சினிமாவில் சந்தானம் காலத்திற்கு முன்பு தமிழ் சினிமா நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தவர் மறைந்த நடிகர் விவேக். அவருடைய படங்களில் பல சமூகக் கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்லியவர்.
நேற்று ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நாளில் திடீரென விவேக் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். அதிலும் யாரோ ஒரு அஜித் ரசிகர் விஜயகாந்த், விவேக் நடித்த 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' படத்தின் காட்சி ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ரசிகர் அதில், “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவை ரீடுவீட் செய்து ஏஆர் ரஹ்மான், “காமெடி சாதனையாளர் விவேக்கை மிஸ் செய்கிறோம், மாபெரும் இழப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் திடீரென விவேக் பற்றி ஏஆர் ரஹ்மான் பதிவிட்டது குறித்து கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது வென்ற பின் இசையமைப்பாளர் கீரவாணி நேற்று ஆங்கிலத்தில்தான் பேசினார். ஒரு வார்த்தை கூட அவர் தெலுங்கில் பேசவில்லை. அதைக் குறித்து தாய்மொழியின் பெருமையைப் பற்றிப் பேச வேண்டும் என மறைமுகமாக ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ளாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற போது கடைசியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என தமிழில் குறிப்பிட்டுப் பேசினார்.