'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், பெண் இயக்குனர் இயக்கி, பெண் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பது பலரிடமும் போய்ச் சென்றது.
தற்போது படத்தை அதிகம் பேர் பார்த்து வருவதாகத் தெரிகிறது. தமிழ் நடிகர் கார்த்தி கூட ஆஸ்கர் விருதுக்குப் பிறகு படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன் எனக் குறிப்பிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். “அகாடமி விருதுக்குப் பிறகு 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன். நானும் ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையையும், வனவிலங்குகளையும், பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். அந்த அழகான மனிதர்களுக்குப் பெருமை சேர்த்த இயக்குனர் கார்த்திகிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.