'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், பெண் இயக்குனர் இயக்கி, பெண் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பது பலரிடமும் போய்ச் சென்றது.
தற்போது படத்தை அதிகம் பேர் பார்த்து வருவதாகத் தெரிகிறது. தமிழ் நடிகர் கார்த்தி கூட ஆஸ்கர் விருதுக்குப் பிறகு படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன் எனக் குறிப்பிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். “அகாடமி விருதுக்குப் பிறகு 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன். நானும் ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையையும், வனவிலங்குகளையும், பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். அந்த அழகான மனிதர்களுக்குப் பெருமை சேர்த்த இயக்குனர் கார்த்திகிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.