
காந்தாரா ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!