ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | ''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து | சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. .. | மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா | 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |

கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. கலை, அரசியலை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டினார். படத்தை பார்த்துவிட்டு, "தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் அதிகம். ஹோம்பேல் பிலிம்ஸை விட யாராலும் இதை சிறப்பாக சொல்ல முடியாது. காந்தாரா என் மனதை நெகிழ வைத்தது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைசிறந்த படைப்பில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இது இந்திய சினமாவின் மாஸ்டர்பீஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.