காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து, முதல் படத்திலேயே லைம்லைட்டுக்கு வந்தவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி ஷெட்டி தமிழில் சூர்யா, தனுஷ் ஆகியோருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்கிற படம் மூலமாக மலையாளத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஜித்தின் லால் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றதுடன் அப்படியே படப்பிடிப்பும துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.