ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கடந்த 40 வருடங்களாக நடிகையாக, இயக்குனராக என திரையுலகில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகை ரேவதி. தென்னிந்திய மொழிகளைத் தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்த ரேவதி, தேசிய விருது, தமிழக அரசு விருது என தனது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இருந்தாலும் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது மட்டும் மிகப்பெரிய கனவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடித்த பூதக்காலம் என்கிற படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார் ரேவதி. இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த விருது எனக்கு கிடைக்காமல் தள்ளிக்கொண்டே போனது. அதனால் தற்போது கிடைத்துள்ள இந்த விருதை நான் எனக்கே அர்ப்பணித்து கொள்கிறேன். அதற்கு நான் தகுதியானவள் தான் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார் ரேவதி.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த பூதக்காலம் படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார்..




