என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தமிழில் ‛வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் தவிர அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்களுக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதை மீண்டும் வலியுறுத்தி இப்படம் கண்டிப்பாக 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரைக்கு வந்துவிடும் என்று ஒரு செய்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதோடு அன்றைய தினம் தமிழகத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடப்படும் அதேநாள் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை என்பதால் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படமும் திரைக்கு வருகிறது. அதனால் விஜய்யின் வாரிசு படமும், பிரபாஸின் ஆதி புருசும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.