'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. அதைத்தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சற்று பிரபலமானார். மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்துள்ள காட்டேரி என்கிற திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
இவர் பதிவிட்டுள்ளதாவது : ‛‛சலுகை பெற்றவர்கள் ஏணியில் ஏறுவதற்கு எளிதாக வழி கிடைப்பதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பாத்துக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் நெப்போடிசம் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதேசமயம் வாரிசு நட்சத்திரங்களுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.




