சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அருவி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த ஒரு படத்திலேயே கவனிக்கத்தக்க கதாநாயகியாக மாறிவிட்ட அதிதி பாலன், கடந்த வருடம் மலையாளத்தில் பிரித்விராஜூடன் இணைந்து கோல்ட் கேஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடித்துள்ள படவேட்டு என்கிற படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.
இது ஒருபக்கமிருக்க சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவித்துவமாகவும், தத்துவமாகவும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்தான் அதிதி பாலன். அந்த வகையில் தற்போது தனது ''சின்னச்சின்ன ஆசைகள்' என்னென்ன என்பதை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளார் அதிதி பாலன்.
அவர் வெளியிட்ட பதிவில், “காட்டில் இருக்க வேண்டும்.. அற்புதமான பகுதிகளுக்கு மலை ஏற்றம் செல்ல வேண்டும்.. பறவைகள் மற்றும் பூச்சிகளின் சத்தங்களை கவனிக்க வேண்டும். அருகில் ஓடும் நீரோடையின் சலசலப்பை கேட்டு ரசிக்க வேண்டும். சூரியன் மறையும் அழகான தருணங்களை பார்த்து ரசிக்க வேண்டும்.. பயணிக்கும்போது எல்லாம் புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும்.. தாவரங்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை கேட்டறிந்து கற்றுக் கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். எந்தப்பகுதியில் பயணிக்கின்றேனோ அங்கே கிடைக்கும் உணவுகளையே உண்ண வேண்டும். குறிப்பாக அமைதி வேண்டும். இவையெல்லாம் என்னுடைய ஆசைகளில் சில” என்று குறிப்பிட்டுள்ளார் அதிதி பாலன்.