அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அருவி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த ஒரு படத்திலேயே கவனிக்கத்தக்க கதாநாயகியாக மாறிவிட்ட அதிதி பாலன், கடந்த வருடம் மலையாளத்தில் பிரித்விராஜூடன் இணைந்து கோல்ட் கேஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடித்துள்ள படவேட்டு என்கிற படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.
இது ஒருபக்கமிருக்க சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவித்துவமாகவும், தத்துவமாகவும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்தான் அதிதி பாலன். அந்த வகையில் தற்போது தனது ''சின்னச்சின்ன ஆசைகள்' என்னென்ன என்பதை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளார் அதிதி பாலன்.
அவர் வெளியிட்ட பதிவில், “காட்டில் இருக்க வேண்டும்.. அற்புதமான பகுதிகளுக்கு மலை ஏற்றம் செல்ல வேண்டும்.. பறவைகள் மற்றும் பூச்சிகளின் சத்தங்களை கவனிக்க வேண்டும். அருகில் ஓடும் நீரோடையின் சலசலப்பை கேட்டு ரசிக்க வேண்டும். சூரியன் மறையும் அழகான தருணங்களை பார்த்து ரசிக்க வேண்டும்.. பயணிக்கும்போது எல்லாம் புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும்.. தாவரங்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை கேட்டறிந்து கற்றுக் கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். எந்தப்பகுதியில் பயணிக்கின்றேனோ அங்கே கிடைக்கும் உணவுகளையே உண்ண வேண்டும். குறிப்பாக அமைதி வேண்டும். இவையெல்லாம் என்னுடைய ஆசைகளில் சில” என்று குறிப்பிட்டுள்ளார் அதிதி பாலன்.