துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அருவி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த ஒரு படத்திலேயே கவனிக்கத்தக்க கதாநாயகியாக மாறிவிட்ட அதிதி பாலன், கடந்த வருடம் மலையாளத்தில் பிரித்விராஜூடன் இணைந்து கோல்ட் கேஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடித்துள்ள படவேட்டு என்கிற படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.
இது ஒருபக்கமிருக்க சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவித்துவமாகவும், தத்துவமாகவும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்தான் அதிதி பாலன். அந்த வகையில் தற்போது தனது ''சின்னச்சின்ன ஆசைகள்' என்னென்ன என்பதை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளார் அதிதி பாலன்.
அவர் வெளியிட்ட பதிவில், “காட்டில் இருக்க வேண்டும்.. அற்புதமான பகுதிகளுக்கு மலை ஏற்றம் செல்ல வேண்டும்.. பறவைகள் மற்றும் பூச்சிகளின் சத்தங்களை கவனிக்க வேண்டும். அருகில் ஓடும் நீரோடையின் சலசலப்பை கேட்டு ரசிக்க வேண்டும். சூரியன் மறையும் அழகான தருணங்களை பார்த்து ரசிக்க வேண்டும்.. பயணிக்கும்போது எல்லாம் புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும்.. தாவரங்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை கேட்டறிந்து கற்றுக் கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். எந்தப்பகுதியில் பயணிக்கின்றேனோ அங்கே கிடைக்கும் உணவுகளையே உண்ண வேண்டும். குறிப்பாக அமைதி வேண்டும். இவையெல்லாம் என்னுடைய ஆசைகளில் சில” என்று குறிப்பிட்டுள்ளார் அதிதி பாலன்.