ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இது எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். இதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. விஜய்யுடன் இணைந்ததை அடுத்து அஜித்துடன் பவித்ரா பட த்தில் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிக்க 31 பேர் ஆடிஷனுக்கு வந்து தேர்வாகவில்லை. 32 வது ஆளாக போன நான் தேர்வானேன். மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு காத்திருக்கிறேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.