ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மலையாள சினிமா மொத்தமாக முடங்கி விட்டது. அதனால் ஓடிடி தளங்கள் அங்கு வேமாக வளர்ந்து வருகிறது. மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 ஓடிடி தளத்தில் வெளியானது 3 படங்களுமே தயாரிப்பாளருக்கும், ஓடிடி தளத்திற்கும் லாபத்தை கொடுத்தது. நயன்தாரா நடித்த நிழல் படம் ஓடிடியில் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதன் முதலில் வெளியானது பகத் பாசில் நடித்த சி யூ சூன் என்ற திகில் படம். ஊரங்கு காலத்தில் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஜோஜி படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது.
தற்போது பகத் பாசிலின் 3வது படமாக மாலிக் வெளியாக இருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டோ ஜோசப்பின் முடிவை எதிர்க்கப் போவதில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பகத் பாசில் ஓடிடி வெளியீட்டில் ஹாட்ரிக் அடிக்கிறார்.




