விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

1992ல் கேரளவையையே உலுக்கிய கொலை வழக்கு தான் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கு.. 28 வருடங்கள் கழிந்த நிலையில், இவரை கொலை செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவரும் கன்னியாஸ்திரி ஒருவரும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும் இந்த கொலை நிகழ்வை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான திருடன் ஒருவனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கையும் அந்த நல்ல திருடனையும் மையப்படுத்தி சோரன் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பது தான். இந்தப்படம் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் செயின்ட் அந்திக்காடு. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமை எங்களுக்கு கிடைத்துள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.