2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தெலுங்கு திரையுலகில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக, ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்தவர் மகேஷ்பாபு. குறிப்பாக இப்போது வரை ஆக்சன் ரூட்டை விட்டு நகராமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார். அவரது 39வது படமாக தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தொட்டுள்ளார். வயது தான் 50 ஆகிறதே தவிர நாளுக்கு நாள் ஒரு கல்லூரி மாணவரின் தோற்றத்திற்கே மாறிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு குறித்து தனது பிறந்த நாள் வாழ்த்துத் செய்தியில் அதே கருத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் தெலுங்கு சினிமாவின் பெருமை. எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகளை பெற தீர்மானிக்கப்பட்டவர். ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும்போது இன்னும் இளமையாகிக் கொண்டு செல்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான ஒன்றாக அமையட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரும் வாழ்த்தும்போது, “பிறந்தநாள் வாழ்த்துகள் மகேஷ் பாபு அண்ணா.. உங்களது வெற்றிக்காக அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் மகேஷ் பாபு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.