பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானாலும் 2008 முதல்தான் அடுத்தடுத்து பல 100 கோடி படங்கள் வர ஆரம்பித்தது. இப்போது 100 கோடி என்பதை விட 1000 கோடி என்பதுதான் ஒரு பெரும் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மலையாளத் திரையுலகத்தில் அவர்களது மாநிலமான கேரளாவில் இதுவரையில் எந்த ஒரு படமும் 100 கோடி வசூல் சாதனையைப் புரிந்ததில்லை. தற்போது அப்படிப்பட்ட ஒரு புதிய சாதனையை முதல் சாதனையைப் படைத்துள்ளது மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' மலையாளப் படம்.
உலக அளவில் மொத்தமாக 200 கோடி வசூலைப் பெற்றுள்ள படம் கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூல் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மோகன்லால் நடித்து அதிக பொருட்செலவில் தயாரான 'எல் 2 எம்புரான்' படம் கூட அங்கு 100 கோடி வசூலிக்கவில்லை. ஆனால், குறைந்த பொருட்செலவில் தயாரான 'தொடரும்' படம் இப்படி ஒரு சாதனையைப் படைத்திருப்பது பெரிய விஷயம்.
இத்தனைக்கும் மோகன்லால் நடித்து வந்த 'த்ரிஷ்யம்' படம் அளவிற்கு இப்படம் தரமான ஒரு படம் என்ற பெயரைப் பெறவில்லை. இருப்பினும் வசூலில் சாதனை புரிவதுதான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.