ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகர் பிருத்விராஜ் முதன்முறையாக டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்து மோகன்லால் வைத்து கடந்த 2019ல் இயக்கிய படம் 'லூசிபர்'. அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பிருத்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தை இயக்கி முடித்துவிட்டார். மோகன்லாலை முதன்முறையாக 'மனசில் விரிஞ்ச பூக்கள்' என்கிற படத்தில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் பாசில், முதல் பாகத்தில் பாதர் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மோகன்லால் இயக்குனர் பாசில் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எனது குருநாதர் பாசில். அவரது குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு மேலாக நெருங்கிய உறவு நீடித்து வருகிறது. அவர் இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்து விட்டேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை லூசிபர் படத்தில் நிறைவேறியது. தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தோம். அவருடன் மீண்டும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.




