இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரேமம் என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலமாக மலையாளம் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அவரது படத்தின் மூலம் அறிமுகமான கதாநாயகிகள் இப்போதும் பரபரப்பாக பிசியான நடிகைகளாக வலம் வருகின்றனர். பிரேமம் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளி விட்டுவிட்ட அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார். ஆனால் இத்தனை வருட காத்திருப்பு வீணானது போல அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் அந்த படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் கூறும்போது, “பிரித்விராஜ் நடித்ததால் கோல்டு படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக கிட்டத்தட்ட ரிலீசுக்கு முன்பே 40 கோடி வரை பிசினஸ் பேசப்பட்டது. ஆனால் திட்டமிட்டு சிலரால் படம் பற்றி எதிர்மறையாக பரப்பப்பட்டு தியேட்டர்களில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கப்படும் விதமாக உள்ளடி வேலைகள் நடைபெற்றன. ஒரு கவுரவமான தோல்வியை கூட பெறவிடாமல் தடுக்கும் அளவிற்கு கோல்டு படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட நபரின் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.