'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட மாத இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்புக்கு என தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சமீப நாட்களாக விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர இருக்கிறது.
இந்த இடைவெளியில் ரசிகர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அல்லு அர்ஜுன். அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது கைகளில் தூக்கி ஏந்தியபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கூட சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் சந்திப்பின்போது இதேபோன்று ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை தனது கைகளில் தூக்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டது அப்போது இதே போல வைரலானது குறிப்பிடத்தக்கது.