டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகம் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் மூலமாகத்தான் முதன்முறையாக 50 கோடி வசூல் என்கிற சாதனையை சொந்தமாக்கியது. அதன்பிறகு பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போதெல்லாம் குறைந்தபட்சம் 50 கோடி வசூல் கிளப்பிலாவது இணைய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
அந்தவகையில் மோகன்லாலை தொடர்ந்து பிரித்விராஜ், நிவின்பாலி, மம்முட்டி, துல்கர் சல்மான் என பலரும் அவ்வப்போது 50 கோடி வசூல் கிளப்பில் தங்களது படத்தை இணைத்து சாதனையில் பங்கெடுத்துக் கொண்டனர். அதே சமயம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக, ஆக்சன் நாயகனாக வலம் வந்த சுரேஷ்கோபி, இதுபோன்ற சாதனைகள் நிகழ்ந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல் பக்கம் தனது பார்வையை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீண்டும் திரையுலகில் முன்பு போல கவனம் செலுத்தி நடித்து வரும் சுரேஷ்கோபி, இப்போது தானும் முதன்முறையாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார். சமீபத்தில் பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்சனில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படம் 50 கோடி வசூலித்துள்ளதுடன் தற்போதும் பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சுரேஷ்கோபி மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.




