வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இந்த இரண்டு வருடங்களில் சினிமா பிரபலங்கள் பல பேர் தங்களது விவாகரத்து அறிவிப்பையும், மறுதிருமண அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சீனு வைட்லா தனது மனைவி ரூபாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ்பாபு நடித்த தூக்குடு, ஆகடு மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பாட்ஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் தான் சீனு வைட்லா. இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக புதிய படம் ஏதும் இயக்காமல் இருந்து வருகிறார்.
இதன் பின்னணியில் அவருக்கும் அவரது மனைவிக்குமான குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனு வைட்லாவின் மனைவி ரூபா, அவர் இயக்கிய பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோருக்கும் பிரத்தியோக ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர். ரூபாவின் கேரியரில் அவர் மிகப்பெரிய அளவு வளர வேண்டும் என அதற்கு உறுதுணையாக நின்றவர் தான் சீனு வைட்லா. இருந்தாலும் தற்போது இவர்கள் இருவருக்குமான பிரிவு தவிர்க்க முடியாததாக மாறி, விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளது துரதிர்ஷ்டமான ஒன்றுதான்.