தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக சம்பள உயர்வு அளிக்கப்படாததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா சினிமா தொழிலாளர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர்களும், நடிகர்களும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக சிறு முதலீட்டு படங்கள் எடுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓடிடி வெளியீடு மற்றும் நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. சம்பள உயர்வால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். 2 மாதங்கள் கடந்தாலும் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கல்யாண் இதனை உறுதி செய்தார்.