ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக சம்பள உயர்வு அளிக்கப்படாததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா சினிமா தொழிலாளர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர்களும், நடிகர்களும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக சிறு முதலீட்டு படங்கள் எடுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓடிடி வெளியீடு மற்றும் நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. சம்பள உயர்வால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். 2 மாதங்கள் கடந்தாலும் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கல்யாண் இதனை உறுதி செய்தார்.