ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பொதுவா நடிகர், நடிகைகள் கதைக்கு ஏற்றபடி பிணமாக நடிப்பது வழக்கம். அது ஒரு சில காட்சிகளாக இருக்கும், ஆனால் படம் முழுக்க பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வம். 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ், 'ஏலே' படத்தில் சமுத்திரகனி, சமீபத்தில் வெளியான 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்திருந்தனர்.
ஆனால் ஒரு நடிகை அதிகமான காட்சிகளில் படம் முழுக்க பிணமாக நடித்திருப்பது வருகிற 7ம் தேதி வெளிவர இருக்கிற 'எமகாதகி' படத்தில் நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர். ஆந்திராவை சேர்ந்த இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா' என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர். அதன் பிறகு 'மிஸ்டர் பிரகனன்ட்' படத்தில் நடித்தார். தற்போது 'எமகாதகி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "படத்தின் படப்பிடிப்பு 40 நாள் வரை நடந்தது. இதில் நான் 20 நாட்கள் பிணமாக நடித்தேன். படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோதே உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் வெறும் பிணம் அல்ல... அதற்கு பின்னால் ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. இதில் நான் பிணமாக மட்டுமே நடிக்கவில்லை. எனது கேரக்டருக்கு காதல் இருக்கிறது. அது தொடர்பான மோதல் இருக்கிறது. வாழ்க்கையில் சில லட்சியம் இருக்கிறது. கொடுமைகளுக்கு எதிராக துணிந்து நிற்கும் சக்தி இருக்கிறது. இந்த படம் தமிழில் எனக்கு நல்ல இடத்தை தரும் என்று நம்புகிறேன்" என்றார்.