தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

பொதுவா நடிகர், நடிகைகள் கதைக்கு ஏற்றபடி பிணமாக நடிப்பது வழக்கம். அது ஒரு சில காட்சிகளாக இருக்கும், ஆனால் படம் முழுக்க பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வம். 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ், 'ஏலே' படத்தில் சமுத்திரகனி, சமீபத்தில் வெளியான 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்திருந்தனர்.
ஆனால் ஒரு நடிகை அதிகமான காட்சிகளில் படம் முழுக்க பிணமாக நடித்திருப்பது வருகிற 7ம் தேதி வெளிவர இருக்கிற 'எமகாதகி' படத்தில் நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர். ஆந்திராவை சேர்ந்த இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா' என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர். அதன் பிறகு 'மிஸ்டர் பிரகனன்ட்' படத்தில் நடித்தார். தற்போது 'எமகாதகி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "படத்தின் படப்பிடிப்பு 40 நாள் வரை நடந்தது. இதில் நான் 20 நாட்கள் பிணமாக நடித்தேன். படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோதே உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் வெறும் பிணம் அல்ல... அதற்கு பின்னால் ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. இதில் நான் பிணமாக மட்டுமே நடிக்கவில்லை. எனது கேரக்டருக்கு காதல் இருக்கிறது. அது தொடர்பான மோதல் இருக்கிறது. வாழ்க்கையில் சில லட்சியம் இருக்கிறது. கொடுமைகளுக்கு எதிராக துணிந்து நிற்கும் சக்தி இருக்கிறது. இந்த படம் தமிழில் எனக்கு நல்ல இடத்தை தரும் என்று நம்புகிறேன்" என்றார்.




