'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குருப் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் நவ-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலைவழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு.. சுகுமார குருப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக்கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சுகுமார குருப்பின் வாழ்க்கை தான் தற்போது படமாக மாறி இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.. இந்தநிலையில் இந்த நிஜ சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான சாக்கோவின் குடும்பத்தினரை அழைத்து தற்போது படத்தை போட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த சாக்கோவின் மகன் ஜிதின், “படத்தை பார்த்த பின்னர் தான் எங்கள் மனதில் இருந்த பல சந்தேகங்களும் தவறான புரிதலும் அகன்றன. இயக்குனர் ஸ்ரீநாத் என் தந்தை பற்றி படமக்கப்போவதாக எங்களிடம் என்ன சொன்னாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளார்” என படம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்..
அதேசமயம் இந்தப்படம் தயாராகி வந்தபோது,. அந்த கிரிமினலான சுகுமார குருப்பின் மனைவி தனது கணவனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தப்படம் இருக்குமோ என தானும் தன் மகனும் சந்தேகப்படுவதாகவும், படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்டிவிட்டே ரிலீஸ் செய்யவேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்கள்.. ஆனால் இதுவரை அவர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்டவில்லை.
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறும்போது, இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குருப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம். குறிப்பாக சுகுமார குருப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என கூறியுள்ளார்.




